Thursday, October 18, 2012

முத்தத்திற்கோ ஆடை அவிழ்ப்பதற்கோ தயங்கக் கூடாது – நடிகைக்கு அப்பாவின் அட்வைஸ்!!

கன்னடத்துப் புதுக்கிளி ரிஷீகா எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்கத் தயாராக இருக்கும் பரந்த மனசுக்காரர்தான். ஆனாலும் அவரால் டூ பீஸ் உடை அணிந்து நடித்தபோது ரொம்பவே சங்கடமாகி விட்டதாம்.
கன்னட இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு மகள்தான் இந்த ரிஷீகா. கன்னட சினிமாவின் இளம் நாயகி. இளமை கொஞ்சும் இந்த நாயகி, எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்க தயார் என்கிறார் அதிரடியாக. கதைக்குத் தேவை என்றால் முத்தமிடுவது போன்ற காட்சியிலோ அல்லது ஆடை அவிழ்ப்புக் காட்சியிலோகூட நடிக்கத் தயங்கக் கூடாது என்று எனது அப்பா சொல்லிக் கொடுத்துள்ளார்.
எனவே எந்த கேரக்டராக இருந்தாலும், கதைக்குப் பொருத்தமாக இருந்தால் நான் தயார்தான் என்கிறார் ரிஷீகா. ஆனால் சமீபத்தில் டூ பீஸ் உடையில் நடித்தபோது ரொம்ப சங்கடமாகி விட்டதாம். கான்டீரவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ரிஷீகா. இதில் அவர் ஒரு பாடலுக்கு பிகினி உடையில் வருகிறாராம். முதல் படத்தில் நாயகிகளை கவர்ச்சியில் குளிப்பாட்டுவது இயக்குநர்களின் வாடிக்கைதான்.
அந்த நியதி மாறாமல், ரிஷீகாவையும் கவர்ச்சிக் குளியல் போட வைத்துள்ளாராம் இப்படத்தின் இயக்குநர். ஆனால் இயக்குநரே வியந்து போகுமளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார் ரிஷீகா. இது குறித்து அவர் கூறுகையில், “கன்னட சினிமாவில் கவர்ச்சி நாயகிகளுக்குப் பஞ்சம் உள்ளது. அதை சரி செய்ய நான் விரும்புகிறேன்.
எனக்கு கவர்ச்சிகரமான உடைகள் பொருத்தமாக இருக்கும். டூபீஸில் நடிக்கக்கூட நான் தயார்தான். அப்படி நடித்தும் உள்ளேன். இருப்பினும் டூபீஸ் அணிந்து நடித்தபோதுதான் சற்று சிரமமாக உணர்ந்தேன். பாங்காக்கில் வைத்து அந்தக் காட்சியைப் படமாக்கினார் இயக்குநர்.
டூபீஸ் அணிந்தபோது பெரிதாக தெரியவில்லை. ஆனால் நீச்சல் குளத்திலிருந்து நான் எழுந்தபோது குறைந்தது 30 ஆண்களாவது என்னை விறைத்துப் போய் பார்த்தனர். இதனால் சற்று சங்கோஜமாகி விட்டது” என்கிறார் ரிஷீகா.

No comments:

Post a Comment